Monday 30 May 2016

ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் சிறுகதைப் போட்டியில்.. மறு அறிவிப்பு

Rate this posting:
{[['']]}
வணக்கம் நண்பர்களே...
வெட்டி பிளாக்கர் குழுமம் இரண்டாம் முறையாக சிறுகதைப் போட்டி நடத்துகிறது. போட்டி பற்றிய அறிவிப்பு மற்றும் விவரங்களை  வெட்டிபிளாக்கர் குழுமம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2016  என்ற பதிவில் வெளியிட்டிருந்தோம். 
வலைப்பூ - ப்ளாக் வைத்திருப்பவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவித்திருந்தோம். ஆனால், ப்ளாக் இல்லாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு தரலாமே என மின்னஞ்சலிலும், முகநூலிலும் கேட்டுக் கொண்டதால், கதை எழுதும் ஆர்வமுள்ள அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அதோடு சிறுகதைகளை அனுப்ப வேண்டிய  கடைசி தேதியும் (15 - 06- 2016 இரவு 12.00க்குள்) இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்படுகிறது. 


பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 8000

இரண்டாம் பரிசு ரூ 5000

மூன்றாம் பரிசு ரூ 2500

சிறப்பு பரிசு ரூ750 ஆறு படைப்பாளிகளுக்கு 

விதிமுறைகள். 

1.ப்ளாக் வைத்திருப்பவர்கள் மட்டும் மூன்று கதைகள் வரை அனுப்பலாம். மற்றவர்கள் ஒரு கதை மட்டுமே அனுப்ப வேண்டும். 

2.இதுவரை எங்கும் வெளியாகாத கதைகளாக இருக்க வேண்டும் 

3.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

4. கதைக்களம் தந்தையைப் பற்றி இருக்க வேண்டும். முடிந்தவரை சம கால மொழிநடை வழக்கில் எழுத்துப் பிழையின்றி இருத்தல் நலம்.. 

5. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப் பிளாக்கர் அட்மின்கள், நடுவர்கள் கலந்து கொள்ளக் கூடாது. 

6. PDF/ MS WORD/ NOTEPAD மற்றும் பிற வடிவில் இணைப்பாக அனுப்ப வேண்டாம். (பலர் இந்த முறைகளில் அனுப்பியதால் பிளாக்கில் பதிவு செய்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கிறோம்) ஆகையால் யுனிக்கோடு முறையில் மின்னஞ்சலில் நேரடியாக தட்டச்சு செய்து, மின்னஞ்சலில்  மட்டுமே அனுப்பவும். 

7. கதைகளை அனுப்புகிறவர்கள் தங்களது, விவரங்களை (ப்ளாக் முகவரி/முகநூல் முகவரி)  மறக்காமல் குறிப்பிடவும்.  
********************************************

கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள் 


உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைதள முகவரி, உங்கள் தொடர்பு எண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 15 -06-2016 இரவு 12.00க்குள் அனுப்பவும். 

· கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொது வெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 

· நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்பட மாட்டாது 

· போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை எங்கும் வெளியிடக்கூடாது. 

·கதைகள் http://vettibloggerstories.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் 

ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.